அய்யாத்துரை என்ற பெயரைச் சூட்டவே திமுக தலைவரான மறைந்த கருணாநிதி முடிவெடுத்திருந்தார். "அய்யா' என்றால் பெரியார். "துரை' என்றால் அண்ணாதுரை. ஆனால், சோவியத் நாட்டின் இரும்பு மனிதர் ஸ்டாலின் இறந்த சமயத்தில் பிறந்ததால், ஸ்டாலின் என்ற பெயரை கருணாநிதி சூட்டினார்.
சோவியத் தலைவர் ஸ்டாலினுக்காக, சென்னை கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, "எனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அறிவித்தார். ஸ்டாலின் என்பதற்கான பெயர் காரணம் இதுவே. இது மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள "உங்களில் ஒருவன்' என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.