தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் - எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும்.
இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகவே மாறிவருகிறது. இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான்"ராட்'.
ஆம்ரோ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஜோயல் விஜய். ரேஷ்மா வெங்கட், சாயா தேவி, கன்னிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக சீனிவாஸ் பணியாற்றுகிறார்.