எழுத்தாளர் பிரேம் சந்தின் உண்மையான பெயர்- தனபத் ராய். தொடக்கத்தில் நவாப் பாய் என்ற புனை பெயரில் எழுதினார். இவரின் நூல்களுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பிரேம் சந்த் என்று பெயரை மாற்றி எழுதினார்.
பிரேம் சந்தின் இரண்டாவது நாவல்: "ஹம் குர்மாவோ- ஹம்- சவாப்'. இதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பணக்காரப் பெண்ணை து(ம)றந்துவிட்டு ஓர் இளம் விதவைக்கு வாழ்வளிக்கும் நாயகனை சித்தரித்திருப்பார்.
தனது எழுத்து ஊருக்கு மட்டும் உபதேசம் அல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். முதல் திருமணம் முறிந்ததால், 1906-இல் சிவராணி தேவி என்ற விதவையை துணிச்சலாகக் கைபிடித்தவர்.