இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறையில் உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக 'அக்னி நட்சத்திரம்' எனும் திரைப்படம் இருந்தது. இந்தப் படத்துக்கு வசனம் எழுதுவதற்கு அமைதியான இடத்தை அவர் தேடினார்.
அப்போது, ஜெமினி கணேசன் கொடைக்கானலில் இருந்த தனது பங்களாவை கொடுத்தார். அங்கிருந்துதான் மணிரத்தினம் தனது படத்துக்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடித்தார்.