சாவித்திரியும், மனோரமாவும்...!

"சாவித்திரி, மனோரமா ஆகிய இருவரின் நடிப்பை மட்டும் கவனித்தாலே போதும்; நடிப்புத் துறையில் சிறந்து விளங்கலாம்'' என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சாவித்திரியும், மனோரமாவும்...!

"சாவித்திரி, மனோரமா ஆகிய இருவரின் நடிப்பை மட்டும் கவனித்தாலே போதும்; நடிப்புத் துறையில் சிறந்து விளங்கலாம்'' என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழா வொன்றில்,  அவர் பேசியதாவது:

"திரைப்படக் கல்லூரியில் நான் பயின்றேன். அப்போது, ஒரு நடிகர் எவ்வாறு சகஜமாகவும் திறமையாகவும் நடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தனர்.

மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், திலீப் குமார், சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்ற பல நடிகர்கள் நடித்த திரைப்படங்களைத் திரையிட்டனர். ஆனால், நடிகைகளில் இருவரின் படங்களை மட்டுமே திரையிட்டனர்.  ஒன்று சாவித்திரி, மற்றொன்று மனோரமா. இவர்கள் இருவரின் நடிப்பை கவனித்தாலே போதும். நடிப்பில் சிறந்துவிளங்கலாம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com