"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார். "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது. அந்தப் பேரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதன்படியே மீராவுக்குப் பின்னர் வேறு எந்தப் படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கவில்லை.