அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம், டாக்டர் பட்டம் பெற்றவுடன் தந்தையிடம் வந்து ஆசி பெற்றார். வாழ்த்திய அண்ணா, தனக்கு ஜூரம் இருப்பதால் பரிசோதித்து மருந்து எழுதி தரச் சொன்னார் அண்ணா.
அதன்படி பரிசோதித்து மருந்து எழுதித் தந்தார், பரிமளம். உடனே அண்ணா ஒரு ரூபாய் அளித்து, ""இது உனக்குத் தரும் ஆசிர்வாதம் மட்டுமல்ல; ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என நினைவு ஊட்டிக்கொண்டேயிருக்கும் காசாகும்" என்றார் அண்ணா.