முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.
சரி, தமிழில் முதன்முதலாக வெளிவந்த தொடர்கதை எது தெரியுமா?
டி. ஆர். ராஜம் ஐயர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்'. 1893- ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் வெளியானது. அதை எழுதியபோது ராஜம் ஐயரின் வயது 21. இந்தத் தொடர் கதை வெற்றி பெற்றாலும், அதன்பின்னர் டி.ஆர்.ராஜம் ஐயர் கதைகள் எழுதாமல் ஞானயோகியாகி வேதாந்த விஷயங்களையே எழுதினார்.