சின்னப்பா தேவர் தீவிர முருக பக்தர். ஆனால், அவர் முருகர் கோயிலில் திருடி இருக்கிறார் என்பது தெரியுமா? அவரே சொல்கிறார்:
""முன்பெல்லாம் கையில் காசில்லாமல் மருதமலைக்கு நடந்தே செல்வேன். ஒருநாள் கோயிலுக்கு வந்த பக்தர், ஓரணா காசை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி சந்நிதானத்துக்கு நேராக வாசல் படி மீது வைத்தார். அவர் போனதும் அந்தக் காசை எடுத்துகொண்டேன். அவ்வப்போது இப்படியே திருடினேன். பின்னர் தவறை உணர்ந்து, முருகனுக்கே செலவு செய்து மகிழ்ந்தேன்'' என்றார்.