பெட்ரோல் கொண்டு செல்லும் லாரிகளின் பின்புறம் தரையைத் தொட்டு கொண்டு ஒரு சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும். ஏன் தெரியுமா? சாலையில் டயர் உராயும்போது, மின்சாரப் பொறி எழக்கூடும். அது எளிதில் பெட்ரோலை பற்றிக் கொள்ள செய்யும். அதுபோன்ற ஆபத்து நிகழாமல் தடுக்கவே இந்தச் சங்கிலி பயன்படுகிறது. உராய்வதால் ஏற்படும் நிலை மின்சாரத்தை "எர்த்' செய்யும் வேலையை சங்கிலி செய்வதால், விபத்து தவிர்க்கப்படுகிறது.