தமிழ்நாடா வெள்ளக்காடா...

உசுருமட்டும் போகவில்லஉடுத்ததுணியில் நிக்கிறோம் – பேய்மழை பெஞ்சு எங்க வாழ்க்க

உசுருமட்டும் போகவில்ல
உடுத்ததுணியில் நிக்கிறோம் – பேய்
மழை பெஞ்சு எங்க வாழ்க்க
முறிஞ்சு இங்கே மிதக்கிறோம்!

வீடுமுட்ட வெள்ளம் வந்து
வீதிவந்து நிக்கிறோம் – யாரு
தந்த உதவியாலோ
பாதி வயிற்றக் கழுவுறோம்!

நீரடிச்ச பொருளத் தேடி
ஓடி எங்கோ போகிறோம் – தேரு
போல காரு கொண்ட
மனிதம் கீழே பாக்குறோம்!

சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் உண்ணுறோம் – கோயில்
இல்ல சாமி இல்ல
இதயம் மட்டும் பாக்குறோம்!

மாடிவீடு குடிசை எல்லாம்
மண்டபத்தில் பாக்குறோம் – பிள்ளைக்
குட்டி செல்ல நாயும்
குழுமி ஒண்ணா கெடக்கிறோம்!

கதவத்தட்டி உணவு தந்த
மனித நேயம் பாக்குறோம் – ஒரு
மழையில் உலகம் கழுவப்பட்ட
மனவதிர்வை உணர்கிறோம்!

சாக்கடயா நல்ல நீரா
கொதிக்க வச்சு குடிக்கிறோம் – ஒரு
காசும் இல்ல பாலும் இல்ல
நாதியற்று கெடக்கிறோம்!

காலை இல்ல இரவு இல்ல
இருட்டில் மிரண்டு சாகிறோம் – வெளி
தொடர்பும் இல்ல ஆளும் இல்லா
வெள்ளக்காடா பாக்குறோம்!

பாம்புபூச்சி தவளை எல்லாம்
பாதம் ஏற பாக்குறோம் – அக்கம்
பக்கம் வீட்டில் இருந்து
கதறல் சத்தம் கேக்கிறோம்!

ஆசையென்ன கனவுயென்ன
அத்தனையும் தொலைக்கிறோம் – ஓர்
அன்பைக் கொண்டு உலகம் செய்ய
இதயம் வேண்டும் சேர்க்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com