நெஞ்சிற்குள் வெளிச்சம் பரவுகிறது!

தீபாவளி சிறப்புக் கவிதை
Updated on
1 min read

தீபாவளி சிறப்புக் கவிதை

அந்த
ஒளி வெள்ளத்தை
அள்ளிப் பருகலாமெனத் தோன்றும்

புஸ்வாணம்
புஸ்பித்து பொழிவதிலிருந்து
ஆனந்தத்தை அப்படியே வாங்கி
பதுக்கலாம்

தாறுமாறாய் வெடித்து
சிதறிக் கிடக்கும் பட்டாசுகளின்
தாள்களிலிருந்து
காகிதம் தயாரிக்கலாம்

சிறார்களின்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டுவரும்
சந்தோச குரலானது
தீபத்தின் முகத்தில்
வெற்றியை பொருத்துகிறது

ஒவ்வொரு
பட்டாசின் வெவ்வேறான
வெடிப்புகளின்
நீளொலிக்கு ஏற்ப
இல்லம் ஒளி நடனம்
புரிகிறது

இன்னாரென்றில்லாது
எல்லாரின்
மனக்கால்களும் இறங்கி களிக்கும்
ஒளிக் களமானது
ஒருமைப்பாட்டினை விவரிக்கிறது
கதிரொளியா
நிலவொளியா என
இல்லாது காணும்
இந்திய நிலப்பரப்பினில்
ஒளி நடவு
நடந்துகொண்டிருக்கிறது

இதில்
மகிழ்ச்சியும் அழகும்
மனக்குளத்தில்
நீச்சலடித்துக் குளிக்கும்
லயிப்பில்
மனம் பட்டாம்பூச்சியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com