வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பொருள்களின் தரத்தை சோதித்துப் பார்க்க...!

சிறு தொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் தரமானவைதானா?

News image
Updated On :28 மார்ச் 2016, 2:26 pm

சிறு தொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் தரமானவைதானா? என்பதைத் சோதித்து அறிவது மிகவும் முக்கியம். அவ்வாறு சோதித்தறிய மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் 4 முக்கிய மாநகரங்களில் பரிசோதனைக் கூடங்கள் (Testing Center) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் புதுதில்லி ஆகிய இடங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைந்துள்ளன. இந்தப் பரிசோதனைக் கூடங்கள் பரிசோதனைக்கான தேசிய மதிப்பீடு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள இந்த பரிசோதனைக் கூடத்தில் தென் மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருள்களைப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனைக் கூடங்களில் உற்பத்திக்கான மூல பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருள்கள் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து அவற்றின் தரம் குறித்து அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைக் கூடங்களில் மெக்கானிகல், உலோகவியல், எலக்ட்ரிக்கல், ரசாயனம், ஆகிய நான்கு முக்கிய துறை சார்ந்த பொருள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதாவது இயந்திரங்கள் சம்பந்தமான, இரும்பு, அலுமினியம், ஸ்டீல், பைப்புகள், வார்ப்படங்கள் ஆகியவை சம்பந்தமாகவும், மின்சார சாதங்களான மீட்டர்கள், ஒயர்கள் சம்பந்தமாகவும், பெயின்ட், சோப் உள்ளிட்ட ரசாயனம் சம்பந்தப்பட்ட பொருள்களையும், கட்டடங்கள் சம்பந்தமான சிமென்ட், கம்பிகள், டைல்ஸ், கதவுகள், ஜன்னல்கள், ஏற்றுமதிக்கான உணவுப் பொருட்களான சர்க்கரை, பால் பவுடர், புகையிலை, உபயோக பொருள்களான நான்ஸ்டிக் தவா, பால் கேன், எஸ்.எஸ். சிங்க், குடிநீர், நீச்சல்குள நீர், சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து அதனுடைய தரத்தை மதிப்பீடு செய்து அறிக்கை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பரிசோதனை செய்வதற்கான சலுகைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இங்கு பரிசோதனை செய்யப்பட்டு நல்ல தர மதிப்பீடு பெற்ற பொருள்கள், தரமான பொருள்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சென்னையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பொருள்களை

பரிசோதனை செய்து தர மதிப்பீடு செய்ய அணுக வேண்டிய முகவரி :

இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. டெஸ்டிங் சென்டர்,

எண்:651, ஜி.எஸ்.டி. ரோடு, கிண்டி, சென்னை - 600 032.

தொலைபேசி எண்கள் : 044 - 22500634, 044- 22500539.

இணையதள முகவரி :  http:msmetc.com

இ-மெயில்: dctc-sr@dcmsme.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.