முக நூலிலிருந்து...
குறைக்காதநாயும் இல்லை
குறை சொல்லாதவாயும் இல்லை
இவை இரண்டும் இல்லாத ஊரும் இல்லை
-அம்மன் ரகுராமன்
தோல்விக்கான காரணங்கள் இரண்டு
யோசிக்காமல் செய்வது
யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது
-பரசுராமன் தருமலிங்கம்
பணத்தைச்சிக்கனப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும்!
வார்த்தைகளைசிக்கனப்படுத்தினால் உறவு நிலைக்கும்!!
-ராஜேந்திரன்
முயற்சித்து கொண்டே இரு; முடியாது என்ற சொல்
உன் அகராதியில் இருந்து நீக்கப்படும்வரை..!
-மோகனசுந்தரம்
சுட்டுரையிலிருந்து...
ஏற்றத் தாழ்வுகளை தீர்மானிப்பதுஜாதியோ, மதமோ இல்லை!
பணம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிது!!
-கனகாம்பரி
வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகள்
பாவ நிலை, பதட்ட நிலை, பரிதாப நிலை,இழப்பு நிலை, சோக நிலை!
இதெல்லாம் தாண்டி தான் வாழ்க்கையில சந்தோஷமே இருக்கு!
-ஆர்.சி.பி.அமுதவள்ளி
சந்தேகத்துக்குப் பிறகுவரும் நம்பிக்கை "ஆழமானது "
நம்பிக்கைக்குப் பிறகு வரும் சந்தேகம் "ஆபத்தானது'
-ஈரோடு வேலு
வலைதளத்திலிருந்து...
மனிதர்களுக்கு என்ன வேண்டும் எனும் நூலில் 18-ஆம் நூற்றாண்டு தத்துவஞானி ஆடம் பெர்குசன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
"பொதுவாக மனிதர்கள் அமைதியை விரும்புவதாகச் சொன்னாலும் எப்போதெல்லாம் சமூகத்தில் அமைதியும், ஒழுங்கும் நிலவுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கடுமையாகப் போரடித்து ரகளையில் ஈடுபட்டதையே பார்த்திருக்கிறோம்.
அவர்களுக்கு ஸ்திரதன்மையை விட நிலையாமையே மிக பிடித்திருக்கிறது. அமைதியை விட போர் தான் பிடித்திருக்கிறது. தன்னை கடுமையான அச்சத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கும் எதிரிகள் மேல் தான் மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள். பாதுகாப்பை விட ஆபத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பி ஆடும் விளையாட்டுகளும் ஆபத்தானவைதான்.'
எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடும் நிறுவனங்கள், குடும்பங்களில் பிரச்னை வர காரணம் இந்த மனப்பான்மையாக இருக்கலாம். (ஆனால் What do men really want என தான் பெர்குசன் எழுதுகிறார். அந்த காலத்தில் Men என எழுதுவது பொதுவாக மனிதர்களைக் குறிக்கும் வார்த்தை. அல்லது ஆண்களை மட்டுமே தனிப்பட்டு குறிப்பது என பொருள் கொண்டாலும் பிரச்னை இல்லை.
https://www.facebook.com/neander.selvan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



