சமையலில் காரம், உப்பு அதிகமாகிவிட்டால்....

குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றில் நெய்யோ, எண்ணெய்யோ சேர்த்தால் காரம் குறைந்து சுவையும் மணமும்  கூடி விடும்.
சமையலில் காரம், உப்பு அதிகமாகிவிட்டால்....
Updated on
1 min read

டிப்ஸ்... டிப்ஸ்...

* இட்லி, தோசைமாவில்  உப்பு அதிகமானால் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஐந்துநிமிடம் பாலில் ஊறவிட்டு பின் மாவுடன் சேர்க்க உப்பு குறைந்து சரியாகவிடும்.

* குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றில் நெய்யோ, எண்ணெய்யோ சேர்த்தால் காரம் குறைந்து சுவையும் மணமும்  கூடி விடும்.

* பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயைத் துருவி சேர்த்தால் போதும்.  உப்பு குறைந்துவிடும்.

* மட்டர் பன்னீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால்  ஃபிரெஷ் க்ரீம் அல்லது சூடான பாலில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்துவிட காரம் குறைந்து சுவை அதிகமாகிவிடும்.

* ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு ரசத்தைக் கொதிக்க விடவும்.  பிறகு மிளகு, சீரகத்தூள் போட்டு,  அரைமூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விட,  சுவை சரியாக இருக்கும்.

* வற்றல் குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றில் தக்காளியை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்து சுவை கூடிவிடும்.

* குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாகிவிட்டால்  வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு,  முந்திரிப் பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.

* கலவை சாதத்தில் காரம் அதிகமாகிவிட்டால் எண்ணெய் ஒரு தேக்கரண்டி காய்ச்சி ஊற்றிக் கலந்துவிட்டு, பின் வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்துத் தூளாக்கி தூவி பரிமாற காரம் குறைந்துவிடும்.

* பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சேர்க்க உப்பு குறைந்துவிடும்.

* வறுவல், பொரியல் போன்றவற்றில் ரஸ்க்கைத் தூள் செய்து தூவிவிட்டால் காரம் குறைந்துவிடும்.

* மசாலாவில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது தயிரைக் கடைந்து சேர்க்கலாம் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்தால் போதும்.  காரம் குறைந்துவிடும்.

* புலாவ், பிரியாணி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால்  பிரட் தூள் ஒரு கரண்டி எடுத்து வெறும் வாணலியில் ஒரு நிமிடம் சூடாக்கி பின் சேர்த்துவிட்டால் காரம் குறைந்துவிடும்.

* இரண்டு தேக்கரண்டி  அரிசி, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு இரண்டையும் அரைமணி நேரம்  ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்துவிட  உப்பு  சரியாகிவிடும்.
- எச். சீதாலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com