டிப்ஸ்... டிப்ஸ்...

சுண்டலை வேக வைத்து இறக்கும்போது, ஆம்சூர் பொடி,வெள்ளை எள்ளுப் பொடி தூவினால் சுவை சூப்பராக இருக்கும்.
டிப்ஸ்... டிப்ஸ்...
Updated on
1 min read

சுண்டலை வேக வைத்து இறக்கும்போது, ஆம்சூர் பொடி,வெள்ளை எள்ளுப் பொடி தூவினால் சுவை சூப்பராக இருக்கும்.

உருளைக்கிழங்கில் ஃபிங்கர் சிப்ஸ் செய்வது போல் மரவள்ளிக் கிழங்கிலும் செய்யலாம்.
நான்ஸ்டிக் பேனில் திரட்டுப் பால் செய்தால் பால் பொங்காது. அடிக்கடி கிளறிவிட வேண்டியதில்லை. சாதாரண பாத்திரத்தில் செய்வதைவிட  அதிக அளவு கிடைக்கும்.
அடை  நன்கு கரகரப்பாக இருக்க வேண்டும் என்றால் பாசிப்பருப்பு கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு மைக்ரோவேவ் ஓவனில் முப்பது விநாடிகள் வைத்து எடுத்தால் எளிதாக  உரிக்க வரும்.
எலுமிச்சை சாதம், தயிர் சாதம் செய்யும் போது பச்சை மிளகாய்க்குப் பதில் குடைமிளகாயை நறுக்கி வதக்கிச் சேர்த்தால் சுவை கூடும். காரம் இருக்காது.
எந்தவகை உப்புமாவாக இருந்தாலும், துருவிய மாங்காயைச் சேர்த்தால் சுவை கூடும்.
மைதாமாவை நீர் விட்டுப் பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதை நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கேற்ப உப்பும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து முறுக்கு செய்தால் சூப்பராக இருக்கும்.
அரிசிமாவு, கேழ்வரகு மாவு, உளுந்த மாவு இவற்றில் வடை தட்டும் போது, நேரமாகி விட்டால் மாவு இளகிவிடும். வடை தட்ட வராது. ஒரு கைப்பிடி கார்ன் ஃப்ளார் கலந்து தட்டினால் பதம் சரியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com