கிச்சன் டிப்ஸ்...

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.
கிச்சன் டிப்ஸ்...
Published on
Updated on
1 min read

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.

*உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன்  சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அதனுடன் பாகற்காயை வில்லைகளாக நறுக்கிப் போட்டு வற்றல் செய்தால் கசப்பும் காரமுமாக டேஸ்ட்டாக இருக்கும்.

*வேகவைத்த உருளைக்கிழங்குடன் தேவையான அளவு அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சூப்பராக இருக்கும்.

*கூட்டு மீதமாகி விட்டால் அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்துவிட்டால் மாலை டிஃபனுக்கு குருமா தயார்.

*ஆரஞ்சு பழத் தோலையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி வத்தல் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும்.

*ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி செய்தால் பூரி உப்பலாகத் தோன்றும்.

*பாயசம் செய்ய வேண்டிய ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு செய்தால் பாயசம் சீக்கிரம் ரெடியாகி விடும்.

*பஜ்ஜி போட்ட பிறகு கடலை மாவு மீதமாகி விட்டால் அதனுடன் மைதாமாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு சேர்த்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
*கத்தரிக்காய்களை நறுக்கியதும் காம்புகளை எறிந்து விடாமல் சாம்பார் அல்லது ரசத்தில் போடலாம். சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com