ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கிச்சன் டிப்ஸ்...

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.

News image
Updated On :22 ஜூலை 2020, 6:00 am IST

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.

*உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன்  சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அதனுடன் பாகற்காயை வில்லைகளாக நறுக்கிப் போட்டு வற்றல் செய்தால் கசப்பும் காரமுமாக டேஸ்ட்டாக இருக்கும்.

*வேகவைத்த உருளைக்கிழங்குடன் தேவையான அளவு அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சூப்பராக இருக்கும்.

*கூட்டு மீதமாகி விட்டால் அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்துவிட்டால் மாலை டிஃபனுக்கு குருமா தயார்.

*ஆரஞ்சு பழத் தோலையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி வத்தல் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும்.

*ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி செய்தால் பூரி உப்பலாகத் தோன்றும்.

*பாயசம் செய்ய வேண்டிய ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு செய்தால் பாயசம் சீக்கிரம் ரெடியாகி விடும்.

*பஜ்ஜி போட்ட பிறகு கடலை மாவு மீதமாகி விட்டால் அதனுடன் மைதாமாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு சேர்த்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
*கத்தரிக்காய்களை நறுக்கியதும் காம்புகளை எறிந்து விடாமல் சாம்பார் அல்லது ரசத்தில் போடலாம். சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.