கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். மணம் கமகமவென்று இருக்கும்.
கீரையை வேக வைக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பை சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறமும் மணமும் சூப்பர்.
சாப்பாத்திக்கு மாவு பிசையும்போது மாவுடன் பழம் ஒன்று சேர்த்து, பிசைந்து விட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
புளிக்குழம்பு செய்யும்போது கால் தேக்கரண்டி வெந்தயம் போட்டு தாளித்தால் கமகமக்கும்.
சாம்பாரில் முருங்கைக்காயை அப்படியே நறுக்கி போடாமல் இரண்டாக கீறி போட்டால் மணம் சூப்பராக இருக்கும்.
வெண்டைக்காயை நறுக்கி, கடலை மாவில் கலந்து எண்ணெய்யில் பொரித்தால் சுவையான வெண்டைக்காய் பஜ்ஜி ரெடி.
காய்கறியை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்காமல் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி கூட்டோ, குழம்போ தயாரிக்கலாம்.
பருப்பை வேக வைக்கும்போது 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்துவிடும்.
ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவைச் சேர்த்தால் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.