தேவையானவை:
ஓமம் - 1 தேக்கரண்டி,
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி,
தக்காளி துண்டங்கள் - அரை கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டுபல் - 10
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - அரை கிண்ணம்
உப்பு - ருசிக்கேற்ப
சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும். ஓமத்தை தனியே சூடான வாணலியில் ஒருமுறை புரட்டி எடுக்கவும். வாணலியை சூடாக்கி பாதி அளவு எண்ணெயை விட்டு, கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியோடு துளி உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு புளிக் கரைசல் மற்றும் மஞ்சள் தூள் மீதமுள்ள உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த நிலையில் ஓமம் மற்றும் சுக்குப் பொடி சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து மீண்டும் ஒரு கொதி வரும் போது இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கலந்து சாப்பிடவும்.
பயன்: விஷத்தன்மையை நீக்கும் குணம் வாய்ந்தது இந்த குழம்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (26.06.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மேஷம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



