கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஃபில்டர் காபி  மணக்க...

உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதில் அரைத்தேக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :27 அக்டோபர் 2021, 6:00 am IST

உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதில் அரைத்தேக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி ரெடி.

தோசைமாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய்வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்துவிடும். தோசையும் சுவையாக இருக்கும்.

வறுத்த புழுங்கலரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டால், கூட்டுக் கறிகளை இறக்கி வைக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

எள்ளை வாணலியில் வறுக்கும்போது, வெடித்து வெளியே சிதறாமல் இருக்க அவற்றை ஒரு சிறிய துணியில் பொட்டலம் மாதிரி கட்டி வாணலியில் போட்டு எள்ளை வறுக்க வேண்டும்.

மணக்கும் ஃபில்டர் காபி வேண்டுமா ஒரு துண்டு சாக்லெட் அல்லது வெண்ணிலா விதையை ஃபில்டரில் வைத்து காபி கலந்தால் காபி தன் மணத்துடன் சுவையாக இருக்கும்.

பூரி மொறு மொறுப்புடன் இருக்க, மாவைப் பிசைந்து தேய்த்தப்பிறகு, அதை ஒரு டப்பாவில் போட்டு அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு எடுத்து பொரித்தால் பூரி க்ரிஸ்ப்பியாக இருப்பதுடன் எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.

மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி மோர் கலந்து பாருங்கள். சாதம் புதியது போலாகிவிடும்.

இரண்டே மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கலக்குங்கள். இதை அப்படியே ஹாட்பேக் வைத்து மூடி விடுங்கள். இரண்டே மணி நேரத்தில் சுவையான கெட்டித்தயிர் ரெடி.

கறிவேப்பிலை, புதினா இலைகளை உருவியதும், அதன் காம்புகளை தூக்கி எறியாதீர்கள், அவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து வறுத்த உளுந்தம் பருப்போடு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ரசம் மற்றும் காய்கறிகளில் இந்தப் பொடியைப் தூவிவிட்டால் சுவையும் மணமும் அசத்தலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.