எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

புளியோதரை  தயாரிக்கும்போது...

புளியோதரை  தயாரிக்கும்போது  அதனுடன்  பொடியாக  நறுக்கிய  இஞ்சி மற்றும்  வறுத்த  வேர்க்கடலையைச் சேர்த்தால்  புளியோதரை  மிகவும்  ருசியாக இருக்கும்.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 6:00 am IST


புளியோதரை  தயாரிக்கும்போது  அதனுடன்  பொடியாக  நறுக்கிய  இஞ்சி மற்றும்  வறுத்த  வேர்க்கடலையைச் சேர்த்தால்  புளியோதரை  மிகவும்  ருசியாக இருக்கும்.

பெரிய  துண்டு  கத்திரிக்காயை  நீளவாக்கில்  நறுக்கி  மைதாமாவில் தோய்த்து பொரித்தெடுத்து  சென்னா  கிரேவி  செய்து  இறக்கும்போது  கத்திரிக்காயை அதில் சேர்த்து  கொத்துமல்லித் தழையைத் தூவி  இறக்கினால்  சுவையான கத்திரிக்காய்  கோப்தா ரெடி.

மீந்து போன  தோசைமாவில்  பொட்டுக்கடலை மாவு  சிறிது  சேர்த்து  அத்துடன் வெங்காயம்,  பச்சைமிளகாய்,  கறிவேப்பிலை  நறுக்கிச் சேர்த்து  சுவையான பக்கோடா  செய்யலாம்.

உருளைக்கிழங்கை அரை வேக்காடாக  வேக வைத்து பிறகு ரோஸ்ட்  கறி செய்தால்  எண்ணெய்  அதிகம்  செலவாகாது.  மிகவும்  ருசியாகவும்  இருக்கும். 

மைக்ரோ  ஓவனில்  சமைக்கும்போது  காய்கறிகளை  ஒரே  அளவாக  நறுக்க வேண்டும்.  இல்லையென்றால்  சில வெந்தும்  சில வேகாமலும் இருக்கும்.

வாணலியில்  சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி ஜவ்வரிசியைப் போட்டு  பொரித்து  எடுத்து  அதில்  கரம் மசாலா,  கேரட்  துருவல்,  மிளகாய்த் தூள்  கலந்து  செய்தால்  கரகர  மொறுமொறுவென்று  இருக்கும்.

உளுந்து  வடை செய்யும்போது  அரைத்து எடுத்துள்ள மாவில்  ஒருபிடி கோதுமை மாவு சேர்த்துப்  பிசைந்து  செய்தால் வடை  ருசியாக  இருப்பதுடன் எண்ணெய்யும்  குறைவாகவே தேவைப்படும்.

மாங்காய் தொக்கு,  எலுமிச்சைத் தொக்கு  என எந்த  தொக்கு  செய்தாலும் அதில்  கொஞ்சம்  எலுமிச்சைப் பழச்சாற்றை  பிழிந்தால்  தொக்கு  நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.