மாதுளை மற்றும் தூதுவளை வளர்த்த வீட்டில் வயிற்றிலும் நெஞ்சிலும் கலங்கமில்லை என்பது பழமொழி.
மாதுளம் பழத்தில் அயன், பாஸ்பரஸ், தியாமின், நியாசின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த இப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது.
இப்பழத்தை உண்பதால் எலும்புகள், பற்கள் உறுதிப்படும்.
புதிய ரத்தம் உண்டாகும். உடல் வலுப்பெறும்.
நினைவாற்றல் பெருகும். தாகம், காய்ச்சல் தணிக்கும்.
குடல் செரிமானப்பாதையை வலுப்படுத்தும்.
அடிக்கடி மாதுளைச்சாறு உண்பதால் வயிற்றுப்போக்கு அறவே நிற்கும்.
காய்ந்த மாதுளைத்தோல், உப்பு, மிளகு சேர்த்துப் பொடி செய்து பல் துலக்கினால் பல்லில் ஏற்படும் ரத்தக்கசிவு நீங்கி, ஈறு பலமடையும்.
தோல் சுருக்கத்தை குறைத்து, இளமைப்பொலிவை ஏற்படுத்தும்.
இரைப்பையைச் சுத்தப்படுத்தி செரிமானத்தை தூண்டும்.
உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள பித்தத்தை வெளியேற்றும்.
அரோசிக நோய் ( ருசியறியாது நாக்கு மரத்துப்போதல்) என்னும் நோயைப் போக்கி நாக்கை ருசியறிய வைக்கும்.
("இயற்கை நெறி, இனிய மருந்து' என்னும் நூலிலிருந்து.)