சப்பாத்தி மிருதுவாக இருக்க...

பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை செய்யும்போது தீயை குறைத்து வேக வைக்க வேண்டும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க...


பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை செய்யும்போது தீயை குறைத்து வேக வைக்க வேண்டும். இதனால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால் கூட தீய்ந்து போகாது. மிதமான தீயில் எரிவதால் சுவை அதிகமாக இருக்கும்.

மைதா மாவில் சர்க்கரை அல்லது பாகை ஊற்றி கலந்து தோசை சுட்டுக் கொடுக்கலாம்.

பனீர் தயார் செய்யும்போது, மீதம் ஆகும் நீரை சப்பாத்தி மாவில் பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

தேங்காய்த் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்ஃபி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, முள்ளங்கியை சிறிதளவு எண்ணெய்யில் வதக்கிய பின் சாம்பார் செய்தால் சுவையான சாம்பார் தயார். 

தக்காளி சூப் அதிகமான மணமாக இருக்க புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனை தக்காளி சூப்புடன் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.

பச்சை கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

கேரட், பீட்ரூட் வாடிப் போனால் அதை நறுக்குவது கடினமாக இருக்கும். அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது போன்று ஆகி விடும். வெட்டவும் எளிதாக வரும்.

தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்து விடும்.

மைதாவை நீர் விட்டுப் பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து உப்பும், நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்தால் சுவையாக இருக்கும். 

கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து, பிறகு அதை வேகவைத்து பிரீஸரில் வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் போன்றவை தயாரிக்க எளிதாக இருக்கும்.

வெந்தயத்தை வறுத்து சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

இட்லி சுடும்போது மாவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். 

மோர்க் குழம்பை வடிகட்டி அதனுடன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சோடா மாவு சேர்த்து இரவு வைத்துவிட்டு காலையில் ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.

சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com