கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதலைக்காயின் மருத்துவ குணங்கள்!

அதலைக்காய்  என்பது பாகற்காயின் நெருங்கிய மரபுவழிக் கொண்ட ஒரு கொடி இனமாகும்.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 12:30 am

ஏ. காந்தி

அதலைக்காய்  என்பது பாகற்காயின் நெருங்கிய மரபுவழிக் கொண்ட ஒரு கொடி இனமாகும். அதலைக்காய் தமிழ் நாட்டிலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு பாகற்காய்களைப் போலவே இருக்கும்.  சுவையும் கசப்பான சுவை கொண்டது. 

இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவை வளருகின்றன. இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன.

பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும். 

ஒரே கொடியில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண் மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன.  ஆனால், பெண் மலர்கள்தான் காய்களாகின்றன.  காய்கள் கரும்பச்சை நிறமாக இருக்கும். 

உடல் நலத்துக்கு தேவையான பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளது இக்காய். குறிப்பாக நீரிழிவுக்கும், குடற்புழுவுக்கும் நல்ல மருந்தாகிறது.   சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.

அதலைக்காயில் அடங்கியிருக்கும் சத்துகள் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம்,  சோடியம், இரும்பு, செப்பு, மங்கனீசு, துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின் சி,கரோட்டீன் போன்றவை அடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.