பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாட்டி வைத்தியம்!

பித்த கோளாறினால்  தலைச்சுற்று  ஏற்படுவது உண்டு.  சிறிது  இஞ்சி.  கொத்து மல்லிவிதை  இரண்டையும்  வைத்து மைய்ய அரைத்து,  தேனில்  கலந்து சாப்பிட்டால்  தலைச்சுற்று  நீங்கும்.

News image
Updated On :30 மார்ச் 2022, 6:00 am IST

பித்த கோளாறினால் தலைச்சுற்று ஏற்படுவது உண்டு. சிறிது இஞ்சி. கொத்து மல்லிவிதை இரண்டையும் வைத்து மைய்ய அரைத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்று நீங்கும்.

சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. பொடுகு, ஈர்கள் அழியும்.

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், குண்டு உடம்பு வாகு கணிசமாக சீராகும்.

இரண்டு வெற்றிலையுடன் மூன்று ஏலக்காய் வைத்து மென்றுதின்று இரண்டு தம்ளர் சுடுநீர் பருகினால், தொடர் வாந்தி நிற்கும்.

கருஞ்சீரகத்தை காடிவிட்டு விழுதாக அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வர, கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்பட்டு, விரைவில் குணமாகும்.

அரசு இலைகளின் சாறுடன் மஞ்சள்தூள் கலந்து காலிலுள்ள வெடிப்புகளின் தடவி வர வெடிப்புப் புண்கள் ஆறும்.

துளசி இலைச்சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர, சளித்தொல்லை குணமாகும். உடல் சோர்வு நீங்கும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து சாப்பிட்டால், உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

தூக்கமில்லாது அவதிப்படுவோர், இரவு ஒரு செவ்வாழைப்பழம் தின்று, ஒரு டம்ளர் பசும்பால் குடித்தால், நிம்மிதியான தூக்கம் வரும்.

சிறு குறிஞ்சான் இலைச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால், சிறிது கடுகுடன் பசும்பால் தெளித்து விழுதாக அரைத்துப் பற்றிட, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று, சூடான நீர் குடித்தால், வாயுத் தொல்லை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.