சமையலில் ருசியை அதிகரிக்க.... 

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.
சமையலில் ருசியை அதிகரிக்க.... 

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

ஆப்ப மாவு கொண்டு ஆப்பம் சுடுவதற்கு முன்பு மாவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்தால் சீக்கிரம் ஆப்பம் காயாமல் இருக்கும்.

புதினா துவையல், கொத்துமல்லி துவையல் போன்றவற்றை செய்யும் பொழுது புளி சேர்ப்பதற்கு பதிலாக மாங்காய் துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும், மணமும் அட்டகாசமாக இருக்கும்.

பருப்பு சேர்த்து கீரை கடையும் பொழுது கொஞ்சம் பால் சேர்த்து கடைந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

ரவா இட்லி தயாரிக்கும் பொழுது ஒரு கைப்பிடி சேமியாவை வெறும் வாணலியில் வறுத்து தயிரில் 10 நிமிடம் ஊற வைத்து கலந்து பின் அவித்து பாருங்கள், ருசி கூடுதலாக இருக்கும்.

தோசை மாவு தனியாக அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து அரைத்து பாருங்கள், தோசை
மிருதுவாக மெத்தென்று வரும்.

வெங்காய பக்கோடா வீட்டில் செய்யும் பொழுது அதனுடன் கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்தால் பக்கோடா செம டேஸ்டாகஇருக்கும்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு வேக வைத்த சாதத்தை சேர்த்து அரைத்தால் இட்லி, தோசை எதுவாக இருந்தாலும் மெத்தென்று மிருதுவாக வரும்.

சாம்பார் செய்யும் போது திடீரென தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் கொஞ்சம் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கி சாம்பாருடன் சேர்த்து பாருங்கள், கெட்டியான சாம்பார் கூடுதல் ருசியுடன் தயார்.

காலிஃப்ளவர் செய்யும் பொழுது அதன் பச்சை வாசம் சிலருக்கு பிடிக்காது. இது போன்ற சமயத்தில் பால் சேர்த்து தயாரித்துப் பாருங்கள், பச்சை வாசம் நீங்கும்.

காய்கறிகள் செய்யும் பொழுது இறுதியாக சேர்ப்பதற்கு தேங்காய் இல்லை என்றால் அதற்கு பதிலாக கொஞ்சம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டு வறுத்து மாவாக்கிவைத்துக் கொண்டால் தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம்.

தேங்காய்ப் பால் அரைக்க நேரம் இல்லாத சமயங்களில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்துப் பாதி ஆறியதும், தேங்காயை எடுத்து பிழிந்தால் சுலபமாக தேங்காய்ப் பால் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com