தேங்காய்த் துருவல் மீதமாகி விட்டதா? லேசாக வதக்கி சிறிது உப்பு கலந்துவைத்தால், மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம் வீணாகப் போகாது.
காளான் கறி சமைக்கப் போவதற்கு முன், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு (500 கிராம் காளானுக்கு) சேர்த்து சமைக்கவும். காளான் கறி ருசியாக இருக்கவும்.
மாங்காய் சீசனில் பாகற்காய் கறி சமைக்கும்போது, சில துண்டுகள் மாங்காயை அதில் போட பாகற்காயில் கசப்பு நீங்கும்.
அல்வா தயாரிக்கும்போது, வாணலியில் ஒட்டும். இதைத் தவிர்க்க, அல்வா தயாரிக்கும் முன் ஒரு மேஜை கரண்டி மாவை வாணலியில் போட்டு வறுத்தவுடன் வாணலியை உபயோகியுங்கள். ஒட்டவே ஒட்டாது.