கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
பீட்ருட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருக குடல் நோய்கள் குணமாகும்.
பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும்.
முட்டைக்கோஸ் சாறை குடித்துவந்தால் வயிற்றுப்புண் மறையும்.
சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு கேரட்டை மென்று தின்றால் பற்கள் சுத்தமாகும்.
தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
பரங்கிக்காய் சாறு கடும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்கும்.