விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாவம் கணேசன்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார் விலாசினி. இவர், ஆர்.ஜே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி என பன்முக திறமைக் கொண்டவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
விலாசினிக்கு திரையுலகில் பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் "பிரியாணி' திரைப்படத்தில் ஒரு சில வரிகள் பாடியும் இருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்பு கிட்டாததால், சில காலம் ஆர்.ஜே.வாக பணியாற்றினார். அதன்பிறகு, ஆதித்யா தொலைக்காட்சியில் சில காலங்கள் வி.ஜே.வாகவும் இருந்தார். அதன்பிறகு, படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியின் "பாவம் கணேசன்' தொடரின் மூலம் நடிகையானார். விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், தனது இணையபக்கத்தில் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோ சூட் புகைப்படங்கள் மூலம் தற்போது இணைய உலகிலும் பிரபலமாகி வருகிறார் விலாசினி.