வீடுகளில் ஜன்னல் திரைகளைத் தேர்வு செய்வோர் கவனிக்க வேண்டியவை:
ஜன்னல் திரைகளுக்கு வீட்டின் அழகைக் கூட்டுவதில் பெரும் பங்கு உண்டு.
வீட்டுச் சுவரின் நிறத்தையும், சோபாவின் நிறத்தையும் பொருத்து திரைகளின் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் .
திரைகள் பிரதான ஸ்கிரீன், மெல்லிய துணி ஸ்கிரீன், இரண்டடக்கு ஸ்கிரீன் (மெல்லிய, பிரதான ஸ்கிரீன்), என மூன்று வகைகள் உள்ளன.
ஸ்கிரீன்கள் பருத்தி, பாலியஸ்டர்மிக்ஸ், பாலியஸ்டர், வெல்வெட் கலந்த பாலி சில்க் போன்ற துணி வகைகளில் தற்போது அதிகம் இருக்கிறது.
திரைகளின் தரம், விதவிதமான அளவில் ரெடிமெட் ஸ்கிரீன்களும் கடைகளில் கிடைகின்றன.
வீட்டிலில் இருக்கும் ஒவ்வொரு அறையைப் பொருத்து திரைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படுக்கையறைக்கு வெளிச்சத்தை மறைக்கும்படி திக்கான துணியில், டார்க் நிறத்தில் இருக்க வேண்டும். அதனால் இரவில் வெளிச்சம் வராமல் இருக்கும். நல்ல தூக்கம் வரும்.
வரவேற்பறைக்கு வெளிச்சம் வரும் வகையில் வேறு விதமான ஸ்கிரீன்களாக இருக்கலாம்.
பால்கனி போன்ற அதிக வெயில் வரும் இடங்களில் மூங்கிலிலான ஸ்கிரீன்களை போடலாம்.
வெயில் அதிகம் வரும் நேரத்தில் அவற்றை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேர்த்தில் அவற்றை சுருட்டி வைக்கவும் இயலும்.
வீட்டில் பொதுவாக ஸ்கிரீன் அமைக்கும் போது வெளியில் இருந்து பார்த்தால், அறைக்குள் இருப்பவை தெரியாமலும், புற வெளிச்சம், வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் பரவாதவாறும் ஸ்கிரீன்கள் அமைக்க வேண்டும். அதே சமயம் தேவையான அளவு காற்றோட்டம் வரும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஸ்கிரீன்களை தேர்வு செய்யும்போது, அதை மாட்டும் கம்பிகளையும் தேர்வு செய்வது அவசியம்.
வெளியிலிருந்து வரும் தூசிகள் ஸ்கிரீன்களில் படியும். நாளுக்கு நாள் அந்த தூசி அதிகரிக்கும் என்பதால் வாரம் ஒரு முறையாவது ஸ்கிரீன்களை துவைப்பது அவசியமாகும்.