தேவையானவை:
பாசிப் பருப்பு - 200 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பாசிப் பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.