எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சமையல் குறிப்புகள்...

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.

News image
Updated On :24 டிசம்பர் 2023, 12:00 am IST

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிற இலைகள் அதிகம் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும்.  ஓட்டைகள், பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக் கூடாது.

தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவல்லி சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து, மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியோடு இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, சில துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சுவையான பச்சடி தயார்.

சூப்புகள் செய்யும்போது, சோளமாவு அல்லது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து, சலித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

Story image

பச்சை கொத்தமல்லித் தழையை துவையலுக்கு அரைக்கும்போது, புளிபோடுவதற்குப் பதில் ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் சில மோர் மிளகாய் வற்றலை வறுத்துப் போட்டு கடைந்தால் ருசியாக இருக்கும்.

கீரை சமைக்கும்போது, ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பை கலந்தால், கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் இருக்கும்.

வாழைக்காயை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, இரண்டாக நறுக்கி வைத்தால் கருப்பாகாமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.