

தேவையானவை:
பாகற்காய் - 125 கிராம்
புளித்த தயிர் -250 கிராம்
மோர் -125 கிராம்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை:
பழுத்துப் போன அல்லது காயை வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி பின்னர் வெந்நீரைவிட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி எடுத்து புளித்த தயிரில் உப்பைப் போட்டு பிசறவும். இரு நாள்கள் ஊறியவுடன் வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்கவும். மீதி பாகற்காய் இருந்தால், முழுசாகவே வற்றல் போடலாம். எண்ணெயில் பொரித்து சாப்பிட ருசிகரமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.