

தேவையான பொருள்கள்:
தேங்காய் ஒன்று
துருவிய வெல்லம் அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
பச்சரிசி (அ) வறுத்த பாசிப் பருப்பு ஒரு மேசைக் கரண்டி
செய்முறை:
தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப் பருப்பு (அ) பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். அந்தச் சக்கையைச் சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யவும். மொத்தம் மூன்று முறை எடுத்த பாலையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு சிறிதளவு விட்டால் போதும். அடுப்பில் ஏற்றிக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி ஏலக்காய்த் தூள் சேர்த்து நுரைத்து வரும்போதே இறக்கிவிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.