முகம் பார்க்கும் கண்ணாடியை காகிதத்தில் துடைத்தால் நன்றாக இருக்கும்.
உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேசையில் ஈக்கள் தொல்லை குறையும்.
சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து, கொதிக்க வைத்தால் நெய் கெடாமல் இருக்கும்.
எலுமிச்சைப் பழத் தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நாற்றம் உண்டாகாது.
வெள்ளி நகைகள் பளபளப்பாக இருக்க, கடலை மாவும் எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் போதும்.
வெற்றிலைச் சாறுடன் கற்பூரம் சேர்த்து நெற்றிப் பொட்டில் பற்றிட்டால் தலைவலி நீங்கும்.
தும்பை இலைச் சாற்றை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பேன்கள் ஒழியும்.
கால் பாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.
அத்திப் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.