தேவையான பொருள்கள்:
அரிசி, கம்பு, சிறு பருப்பு - தலா 200 கிராம்
பச்சை மிளகாய்- 4
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
சாம்பார் வெங்காயம்- 50 கிராம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நறுக்க வேண்டும். அரிசி, கம்பு, பருப்பு ஆகியவற்றை கழுவி ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி தோசைகளாக வெந்து எடுக்க வேண்டும்.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.