ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

சமையலறையில் கவனிக்க வேண்டியவை..

சமையலறையில் முடிந்தவரை குழந்தைகளை செல்ல அனுமதிக்காதீர்கள். குழந்தையை கையில் வைத்துகொண்டோ, கைப்பேசி பேசிக் கொண்டோ சமைப்பதும் மிக ஆபத்தானது.

News image
Updated On :15 டிசம்பர் 2024, 0:00 am IST

சமையலறையில் முடிந்தவரை குழந்தைகளை செல்ல அனுமதிக்காதீர்கள். குழந்தையை கையில் வைத்துகொண்டோ, கைப்பேசி பேசிக் கொண்டோ சமைப்பதும் மிக ஆபத்தானது.

தூக்கக் கலக்கத்தில் சமையல் அறைக்குச் சென்று சமைக்காதீர்கள்.

வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனப் பொருள்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கைபடாத வகையில் இருக்க வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு கண் முன்னே குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வேலைகளைச் செய்யுங்கள். குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள். தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.

சமைக்கும் முன்பு குழந்தையை குளிக்க வைத்து உணவை ஊட்டி வயிற்றை நிறைத்தால் கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது தூங்குவார்கள். அந்த நேரத்தில் சமையலை முடித்துக் கொள்ளலாம்.

சமையலறைத் தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள்.

மிக்ஸி, கிரைண்டரை பயன்டுத்தி முடித்ததும் சுவிட்சை அணைப்பதோடு, ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது.

குழந்தைக்கு எட்டாத இடத்தில் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்க வேண்டும்.

சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, காஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெப்பமான பிற பொருள்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது எளிதில் தீபிடிக்கும் எதையும் வைக்கக் கூடாது.

சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயுக் கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.