27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சமையலறையில் கவனிக்க வேண்டியவை..

சமையலறையில் முடிந்தவரை குழந்தைகளை செல்ல அனுமதிக்காதீர்கள். குழந்தையை கையில் வைத்துகொண்டோ, கைப்பேசி பேசிக் கொண்டோ சமைப்பதும் மிக ஆபத்தானது.

News image
Updated On :15 டிசம்பர் 2024, 12:00 am IST

சமையலறையில் முடிந்தவரை குழந்தைகளை செல்ல அனுமதிக்காதீர்கள். குழந்தையை கையில் வைத்துகொண்டோ, கைப்பேசி பேசிக் கொண்டோ சமைப்பதும் மிக ஆபத்தானது.

தூக்கக் கலக்கத்தில் சமையல் அறைக்குச் சென்று சமைக்காதீர்கள்.

வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனப் பொருள்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கைபடாத வகையில் இருக்க வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு கண் முன்னே குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வேலைகளைச் செய்யுங்கள். குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள். தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.

சமைக்கும் முன்பு குழந்தையை குளிக்க வைத்து உணவை ஊட்டி வயிற்றை நிறைத்தால் கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது தூங்குவார்கள். அந்த நேரத்தில் சமையலை முடித்துக் கொள்ளலாம்.

சமையலறைத் தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள்.

மிக்ஸி, கிரைண்டரை பயன்டுத்தி முடித்ததும் சுவிட்சை அணைப்பதோடு, ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது.

குழந்தைக்கு எட்டாத இடத்தில் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்க வேண்டும்.

சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, காஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெப்பமான பிற பொருள்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது எளிதில் தீபிடிக்கும் எதையும் வைக்கக் கூடாது.

சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயுக் கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.