மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சமையல் குறிப்புகள்..

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

News image
Updated On :22 டிசம்பர் 2024, 12:00 am IST

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

காய்கறி சாலட் செய்யும்போது, ஒரு கிண்ணம் பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சாலட்டில் போட்டால் சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.

மோர் குழம்பின் மகிமை: மோர் குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு தேக்கரண்டி கடுகையும் சேர்த்து அரைத்து மோர்குழம்பு செய்தால், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

மோர் குழம்பை இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

மோர் குழம்பு செய்யும்போது மோர் அல்லது தயிருடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால், மோர் குழம்பு திரிந்து போகாமல் சுவையாக இருக்கும்.

மாங்காய் தொக்கின் மகத்துவம்: -மாங்காய் தொக்கு செய்யும்போது, மாங்காய்களைத் துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துவிட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

Story image

 மாங்காய்களைத் தோல் சீவி, துருவி வெயிலில் உலர்த்தினால் இரண்டு நாள்களில் வடகம் போல் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். இதை மிக்ஸியில் அரைத்தால் புளிக் குழம்புக்குத் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம்.

 மாங்காய் இனிப்பு பச்சடி செய்யும்போது, தோலை சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 மாங்காயைத் துண்டுகளாக நறுக்கி தேவையான உப்பு, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த மாங்காய் துண்டுகளை வெயிலில் இரண்டு நாள்கள் வரை காய வைத்து மா வத்தலை செய்யலாம்.

 புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேக வைத்து சர்க்கரைப் பாகுடன் அடுப்பில் வைத்து கிளறி ஜாமாகச் செய்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.