பாட்டி வைத்தியம்...

படர் தாமரை  வந்தவர்கள் சிறிது மிளகை நெய்விட்டு அரைத்துத் தடவினால் படர்தாமரை போய்விடும்.
பாட்டி வைத்தியம்...

படர் தாமரை  வந்தவர்கள் சிறிது மிளகை நெய்விட்டு அரைத்துத் தடவினால் படர்தாமரை போய்விடும்.

மாத விலக்கின்போது,  சில பெண்களுக்கு  உதிரப் போக்கு அதிகமாகி வயிறு வலிக்கும். இவர்கள் 8 குறுமிளகையும் சம எடை கற்கண்டையும் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும் சாப்பிட வயிற்று வலி தீரும்.

கர்ப்பிணிகள் அதிக அளவில் இளநீர்  குடித்து வந்தால்  மார்பகம் விரிந்து,  பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப் பால் கொடுக்க வழி வகுக்கும். 

காட்டாமணக்கு இலையை வதக்கிக் கட்ட தாய்ப் பால் சுரக்கும்.

கிச்சிலிக் கிழங்கை வில்லைகளாக நறுக்கி  காயவைத்து இடித்து  தூள் செய்து வைத்துக் கொண்டு  வாய் துர்நாற்றம்  உள்ள நேரங்களில் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

பனிக் காலங்களில் உதடு வெடிப்பு ஏற்படும். இதற்கு கரும்புச் சக்கையை எடுத்து சாம்பலாக்கி  அதனுடன்  வெண்ணெய் கலந்து  உதட்டில் தடவி வர  உதடு வெடிப்பு குணமாகும்.

சுக்கு சிறிது கருப்பட்டி இவைகளை பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வீதம் 3 நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி தீரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com