ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையல் குறிப்புகள்...

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:30 pm

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

தேங்காய்க்குப் பதிலாக, வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம், மிளகு, உப்பு கலந்து சூப் செய்யலாம்.

வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவை பூசி செய்யும் பொரியல் பிரமாதமாக இருக்கும்.

அப்பம் செய்யும்போது, அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.