தேவையான பொருள்கள்:
சக்கரைவள்ளிக் கிழங்கு - 2
சர்க்கரை - 1/2 கிண்ணம்
பால் - 1 டம்ளர்
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 6
செய்முறை :
சர்க்கரைவள்ளிகிழங்கை நன்றாகக் கழுவி தோலை சீவி துண்டங்களாக்கி ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது நெய் ஊற்றி வெந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை போட்டு சர்க்கரை, பால் சேர்த்து ஒன்றாகக் கிளறி ஏலப்பொடியைத் தூவி, இறக்கி முந்திரியை நெய்யில் வறுத்துப்போடவும். இந்தக் கீரை சூடாகவும் சாப்பிடலாம் ஜில் என்றும் சாப்பிடலாம்.