நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாட்டி வைத்தியம்...

அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

News image
Updated On :23 நவம்பர் 2024, 6:30 pm

DIN

நாகஜோதி கிருஷ்ணன்

அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தைக் குறைக்கும்.

வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

கோரைக்கிழங்குச் சூரணமானது ஒரு கிராம் காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை உண்டாகும்.

அகத்திக்கீரை பித்தக் கோளாறுகளை நீக்கும்.

நெல்லி தைலம் வாரம் இருமுறை முழுகி வரப் பொடுகு தீரும்.

பிஞ்சு அவரைக்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும். வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாள்களில் தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது நல்லது.

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.