பாட்டி வைத்தியம்...

அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பாட்டி வைத்தியம்...
Published on
Updated on
1 min read

நாகஜோதி கிருஷ்ணன்

அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தைக் குறைக்கும்.

வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

கோரைக்கிழங்குச் சூரணமானது ஒரு கிராம் காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை உண்டாகும்.

அகத்திக்கீரை பித்தக் கோளாறுகளை நீக்கும்.

நெல்லி தைலம் வாரம் இருமுறை முழுகி வரப் பொடுகு தீரும்.

பிஞ்சு அவரைக்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும். வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாள்களில் தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது நல்லது.

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com