தேங்காய் அல்வா

பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்தவுடன் தேங்காய்த் துருவலையும், அரிசியையும் வெண்ணெய் போல் அரைக்க வேண்டும்.
தேங்காய் அல்வா
தேங்காய் அல்வா
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

தேங்காய்- 1

பச்சரிசி, நெய்- தலா 50 கிராம்

முந்திரி பருப்பு- 10

வெல்லம்- 250 கிராம்

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்தவுடன் தேங்காய்த் துருவலையும், அரிசியையும் வெண்ணெய் போல் அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதைப் போட்டு வெல்லத்தூளையும் போட்டு ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். சுருள வரும்போது நெய்யைவிட்டு வறுத்த முந்திரியை அதில் போட்டு கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com