ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாழைக்காய் புட்டு

வாழைக்காயைத் தோலுடன் மூன்று துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து, தோலை உரித்தெடுக்க வேண்டும்.

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 6:30 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பெரிய வெங்காயம், பெரிய வாழைக்காய்-தலா 2

பச்சை மிளகாய்-3

பூண்டு- 4 பற்கள்

பெருங்காயத் தூள்- அரை தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு- 1 மேசைக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- அரை மேசைக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி

உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயைத் தோலுடன் மூன்று துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து, தோலை உரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி எல்லாவற்றையும் ஒருமுறை புரட்டி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.