தேவையான பொருள்கள்:
மோர் - 2 டம்ளர்
மாங்காய் துண்டுகள் அரை கிண்ணம்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 1
இஞ்சி துருவல் - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை.
செய்முறை:
மாங்காய்த் துண்டுகளை சிறிது நீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்நீரில் கடலைப்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், தேங்காய்த் துருவல் ஊறவைத்து, அரைத்து, மோரில் விட்டு கலக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சூடுபடுத்தி, ஒரு கொதி வந்ததும் வெந்த மாங்காய்த் துண்டுகளையும் உப்பையும் சேர்த்து இறக்கி வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான மாங்காய் மோர் குழம்பு ரெடி
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



