19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

முகப்பருவை அகற்ற...

தினமும் ஒருமுறை முகத்தில் ஆவி பிடித்து, வெள்ளரிக்காய்ச் சாறும் எலுமிச்சைப் பழச் சாறும் சம அளவில் கலந்து முகப் பருவில் தடவ வேண்டும்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2025, 12:00 am IST

தினமும் ஒருமுறை முகத்தில் ஆவி பிடித்து, வெள்ளரிக்காய்ச் சாறும் எலுமிச்சைப் பழச் சாறும் சம அளவில் கலந்து முகப் பருவில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஏதாவது மருத்துவக் குணம் கொண்ட சோப் வைத்து முகம் கழுவினால் முகப் பரு விரைவில் மறையும்.

முகத்தில் ஆவி பிடித்தவுடன் முகப் பருவில் பஞ்சை உபயோகித்து, கற்பூரத் தைலத்தைத் தேய்க்க வேண்டும். இதனால் முகப்பருவை அகற்றலாம்.

முற்றிலும் எலுமிச்சை இலை, கிருஷ்ண துளசி இலை, புதினா இலை ஆகியவற்றை கொதித்த நீரில்விட்டு, முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். பின்னர், எப்சம் உப்பு கலந்த வெந்நீரில் முகம் கழுவ வேண்டும்.

அரை தேக்கரண்டி எலுமிச்சைப் பழச் சாறு, ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறு, ஒரு தேக்கரண்டி வெள்ளரிக்காய்ச் சாறு ஆகியவற்றை செஞ்சந்தனத்தை அரைத்த கூழில் கலந்து முகத்தில் பூசினால், புள்ளிகள் மறையும்.

வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை உணவில் சேர்த்துக்கொண்டால், முகப்பரு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.