புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சுண்டைக்காய் பச்சடி

News image

Picasa

Updated On :16 ஆகஸ்ட் 2025, 6:36 pm

ஆர். ஜெயலட்சுமி

சுண்டைக்காய்- 100 கிராம்

துவரம் பருப்பு- 50 கிராம்

வெங்காயம்- 1

தக்காளி, பச்சை மிளகாய்- தலா 2

சாம்பார் பொடி- 1 மேசைக்கரண்டி

புளி- 1 உருண்டை

கடுகு, உளுந்தம் பருப்பு- தலா அரை மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய்- சிறிதளவு

செய்முறை:

சுண்டைக்காயைக் கழுவி காம்பை எடுத்துப் பொடியாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பை முக்கால் பதமாக வேக வைத்து எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டு பொரிந்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய், தக்காளி போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும். பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துப் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். பச்சடி தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியானவுடன் கீழே இறக்க வேண்டும். சுண்டைக்காய் உடலுக்கு நல்லது. கசப்பு சிறிது இருந்தாலும் பச்சடியாகச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.