எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கட்டடவியலில் முதல் பெண் பொறியாளர்

மும்பை விக்டோரியா ஜூப்ளி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் 1953- ஆம் ஆண்டில் கட்டடவியலில் பொறியியல் பட்டம் பெற்ற சகுந்தலா, 'நாட்டின் முதல் பெண் கட்டடவியல் பொறியாளர்' என்ற பெயரைப் பெற்றவர்.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 12:00 am IST

மும்பை விக்டோரியா ஜூப்ளி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் (தற்போது வீரமாதா ஜீஜாபாய் தொழில்நுட்பக் கல்லூரி) 1953- ஆம் ஆண்டில் கட்டடவியலில் பொறியியல் பட்டம் பெற்ற சகுந்தலா, 'நாட்டின் முதல் பெண் கட்டடவியல் பொறியாளர்' என்ற பெயரைப் பெற்றவர்.

அதற்கடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கட்டடவியல், கட்டமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 முதல் 1970 வரை மும்பை ஐ.ஐ.டி. யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1968-இல் இவரும், இவரது கணவர் பகத்தும் இணைந்து 'குவாட்ரிகான்' எனும் பாலங்கள் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான பாலங்களைக் கட்டி முடித்தனர்.

இதோடு, சகுந்தலா அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பல்வேறு பால வடிவமைப்பு, கட்டுமானங்களில் பணிபுரிந்தார். அதே சமயம் காங்கிரீட் ஆய்விலும் ஈடுபட்டார் .

வெல்டிங், ரிவெட்டிங்கையே நம்பியிருந்த நிலையில், இதற்கு மாற்றாக யூனிஷியர் கனெக்டரை கண்டுபிடித்தார் சகுந்தலா. இது எஃகு பாகங்களை சுத்தமான, புத்திசாலியான துல்லியத்துடன் ஒன்றாகப் பூட்டக்கூடிய கட்டமைப்பாகும். இதற்கு கண்டுபிடிப்பு மேம்பாட்டு வாரியத்தின் மிக உயர்ந்த கெளரவமும் கிடைத்தது.

ஹிமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடியில் இரண்டு மட்டு பாலங்களை (மாடுலர் டிசைன்) வெறும் நான்கு மாதங்களில் கட்டி முடித்தார். 1993-இல் சிறந்த பெண்மணி என்ற விருதைப் பெற்ற இவர், 2012-இல் மறைவுற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.