

தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
கத்திரிக்காய் - 400 கிராம்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்
பொடி கருணைக்கிழங்கு - 200 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
கொத்தமல்லி - ஒரு கட்டு
கடலைமாவு - 2 மேஜை கரண்டி
தனியாப் பொடி - ஒரு மேஜை கரண்டி
சீரகப்பொடி - ஒரு மேஜை கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 8
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கடலை மாவு, தனியாப் பொடி, சீரகப்பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயம் உள்ளிட்ட பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தோலை நீக்கிய கிழங்கு வகைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொத்துக் கொத்தாக நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் மசாலாவைக் காய்கறிகளின் இடைவெளிகளில் நிரப்ப வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய காய்கறிகளை மெதுவாக அதில் இட்டு நன்றாக வதக்க வேண்டும். கவனமாக காய்கறிக் கலவை அடிப்பிடிக்காதவாறு வதக்கி, காய்கறிகள் வெந்த பிறகு இறக்கி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...



