கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கோலத்தின் மகிமை...

கோலம் போடுவதால் அதிகாலை காற்றைச் சுவாசித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:30 pm

மகாலட்சுமி சுப்ரமணியன்

கோலம் போடுவதால் அதிகாலை காற்றைச் சுவாசித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும். கோலத்தின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு வைக்கும் புள்ளி, அதை இணைக்கும் கோடுகள், டிசைனை போடும்போது பெண்களின் சிந்தனை ஒருநிலைப்படுவதோடு, கவனக் குவிப்பும் அதிகரித்து, ஞாபகத் திறன் மேம்படுகிறது. கண்பார்வை கூர்மையாக உதவுகிறது. கால்களுக்கு வலுவைத் தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஓசோன் காற்றால் சுவாசப் பாதையைத் தூய்மையாக்கி, உடல்நலன் நன்றாக இருக்க உதவுகிறது. பசு சாணத்தால் வாசல் தெளிக்கும்போது, மணமாக இருப்பதுடன் கிருமி தொற்றையும் தடுக்கிறது. வாசலில் கோலமிடுவதைப் போன்று பூஜை அறையில் போடும் மூன்று விதமான கோலங்களால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஐஸ்வர்ய கோலம்: இந்தக் கோலத்தை பச்சரிசி மாவில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் போட, லட்சுமி கடாட்சம் அதிகரித்து, சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.

ஹ்ருதய கமல கோலம்: அஷ்ட ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும் பெருக்கக்கூடியது. இந்தக் கோலத்தை ஆரம்பத்தில் போட கஷ்டமாக இருந்தாலும், பழகினால் எளிதாகிவிடும். இதை வாசலில் போடாமல், பூஜை அறையில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே போட வேண்டும்.

லட்சுமி குபேர கோலம்: விசேஷமான இந்தக் கோலத்தையும் பூஜை அறையில் போட, அதிக அளவில் பலன்களைப் பெறலாம். செல்வ வளத்தை அள்ளித் தரும் இந்தக் கோலத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமை, முக்கிய நாள்களில் போட்டு பூக்களால் அலங்கரிக்கச் சிறப்பான பலன்களைப் பெறலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு பின்னர் அகல்விளக்கேற்றி வைக்க, ஐஸ்வர்யம் பெருகும். இல்லம் சிறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.